இயேசுவை நம்புவீர்!
இறை மொழி: யோவான் 17:6-8.
இறை வழி:
தந்தை அறிந்த தம் மக்கட்கு,
தனையன் வாக்கு வழங்கினார்.
மைந்தன் தூதை அடியவர் ஏற்று,
மாட்சி உற்று விளங்கினார்.
விந்தை வாழ்வு வேண்டும் நமக்கு,
விருந்தாய் இன்றும் முழங்குவார்.
இந்தப் பேற்றால் தூய்மை பெற்று,
யார் யார் ஒளிபோல் துலங்குவார்?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.