பிரிவு!


பிரிவு!
இறை மொழி: யோவான் 16:31-32.

31. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள்.

32. இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார்.

இறை வழி:

தொட்டு, தொட்டுப் பார்த்தவர் 
துணையாக இருந்தவர், 
விட்டு, விட்டுப் போகிறார்.
விண் மகனோ வருந்தவில்லை.
கட்டு கட்டாய் இணைத்தவர்,
கண் மணியாய்க் காப்பவர்,
கெட்டு விழக் கைவிடார்; 
கேட்டும் ஏன் திருந்தவில்லை?

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.