யோவான் 17:16.

இறை வழி:

தொடக்கத்தின் முன்னே எவ்விடம் இருந்தோம்?

தொடர்ந்து சென்றால் எவ்விடம் முடிப்போம்?

அடக்கத்தின் பின்னே எவ்விடம் அடைவோம்?

அதற்குத் தேவைகள் எவ்விடம் பிடிப்போம்? 

கிடைக்கிற அறிவால் அவ்விடம் அறியோம். 

கிறித்துவை விட்டால் அவ்விடம் துடிப்போம். 

விடைக்குப் பணிவோம், அவ்விடம் காண்போம்;

விண்ணே வாழ்வு, அவ்விடம் நடப்போம்! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.