72!

முடிந்தது எழுபத்திரண்டு!

எழுபத்து இரண்டு ஆண்டுகள் முடித்தும்
என்னில் இல்லையே முழுமை.
விழுந்தும் எழுந்தும் ஓடிப் பிடித்தும்,
வென்றதோ கொஞ்சம் கொழுமை.
அழுதிடும் நிலைகள் ஆயிரம் வெடித்தும்,
அருளால் மீள்வதே புதுமை.
தொழுது மகிழ, தூய நூல் படித்தும்,
தொண்டும் புரியுமே முதுமை!

-கெர்சோம் செல்லையா.