வேண்டுகிறார்!

வேண்டுகிறார்!

இறை மொழி : யோவான் 16:26. 

வேண்டும் இறைமகன் காட்சி கண்டு,

வேண்டிக் கேட்போர் எத்தனை பேர்?

தூண்டும் அவரது பண்பு கொண்டு,
தூயர் ஆவோர் எத்தனை பேர்?

மாண்டும் மடிந்தும் விழுவோர் கண்டு, 
மனதை மீட்போர் எத்தனை பேர்?

தோண்டும் குழியிலும் வேண்டிக் கொண்டு,
தூக்கப் போவோர் எத்தனை பேர்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

மறைபொருள்!

நல் மொழி:யோவான் 16:25 

25. இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

நல்வழி:

புரியாருக்கு இறையின் வாக்கு,
பொழுது போக்கும் புதிர். 
தெரிவாருக்கு, அத்திருவாக்கு,
தெளிவு ஆக்கும் கதிர்.
விரிவாய்க் கேட்க விரும்பாருக்கு,
விண்ணும் மண்ணும் எதிர்.
அறிவாய் நண்பா, இறை நோக்கு;
அகலும் நெஞ்சின் அதிர்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.