சாதி ஒன்றே!

சாதி ஒன்றேயாம்!

எல்லோரும் எல்லாத் தொழிலும் செய்யவில்லையா?

இறைவேண்டும் வாக்குகளும் பெய்யவில்லையா?

பொல்லார் புகாதபடி வீட்டினையும் காக்கவில்லையா?

புறம் சென்று வாங்கி விற்கவும் நோக்கவில்லையா?

மல்லுக் கட்டாமல், மறைவிலுடல் துடைக்கவில்லையா?

மாற்றாரையும் இதுபோல் இறை படைக்கவில்லையா?

சொல்லுங்கள் இப்போது, நாம் யார் என்ன சாதியென்று.

சொந்தம், ஓர் உறவு, ஒரே சாதி; இதுதான் நன்று!

-கெர்சோம் செல்லையா.

May be a doodle