சட்டம்!
இறை மொழி: யோவான் 15: 10.
- நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
இறை வழி:
இறை ஆணை, இறை சட்டம்,
இவற்றின் பொருள் அறிவீரா?
பிறை பார்த்து உரை கேட்கும்,
பெரியோரே நீர் சிந்திப்பீர்.
நிறைவான வாழ்வு ஒன்றை
நேர்மை மீறிப் பெறுவீரா?
கறை நீக்க தேவை அன்பு
காட்டும் இறை சந்திப்பீர்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.