திருச்சட்டம்!

சட்டம்!

இறை மொழி:  யோவான் 15: 10.

  1. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

இறை வழி:

இறை ஆணை, இறை சட்டம்,
இவற்றின் பொருள் அறிவீரா?
பிறை பார்த்து உரை கேட்கும்,
பெரியோரே நீர் சிந்திப்பீர்.
நிறைவான வாழ்வு ஒன்றை  
நேர்மை மீறிப் பெறுவீரா?    
கறை நீக்க தேவை அன்பு
காட்டும் இறை சந்திப்பீர்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.