வழி ஒன்றே!

இயேசுவே வழி!

இறை வாக்கு: யோவான் 14:6.

  1. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

இறை வாழ்வு:

வழி எது? வாய்மை எது?
வாழ்பவரின் உயிர் எது?
தெளிவிலாது நானிருந்தேன்.
தெரியார் வாழ்வில் தீது.
மொழி எது, மேன்மை எது?
மெய்யின்பம் இங்கு எது?
அழியா அன்பென்றார் ஏசு;
அது ஒன்றே இறை தூது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.