விண் வீடு!

எனக்கும் ஓரிடம் தாரும்!

இறைவாக்கு: யோவான் 14:3.

3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இறைவாழ்வு:

எனக்கும் ஓரிடம் உம்மிடம் தாரும்.

இப்படிக் கேட்கத் தகுதி இல்லை.

நினைக்கும் உள்ளில் இன்றே வாரும்;

நெஞ்சே கோயில் வேறில்லை.

மணக்கும் உம் திரு வாக்கும் கூறும்;

மனதின் அழுக்கும் குறைவில்லை.

பிணத்தைச் சுமந்து நடக்கிறேன் பாரும்;

பிழை போகாவிடில் பேறில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.