இயேசு போதும்!

இயேசு போதும்!

இறை வாக்கு: யோவான் 14:8-9.

  1. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
  2. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?

இறை வாழ்வு:

எப்படி இறையிடம் செல்வது என்று,
எண்ணிப் பார்க்கிற நண்பர்களே,
சொற்படி பிறந்து, சொற்படி இறந்து,
சொற்படி எழுந்தவர் பாருங்களே.
அப்படி இதுபோல் ஒருவர் இருந்தால்,
அதையும் எனக்குக் கூறுங்களே.
இப்படி மீட்டு இறையிடம் சேர்க்கும்,
இயேசு போதும், வாருங்களே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.