மகனும் தந்தையும்!

தந்தையை மகனில் காண்போம்!

இறை வாக்கு: யோவான் 14:7.

  1. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.

இறை வாழ்வு:

எங்கே இருக்கிறார் இறைவன் என்று,
எங்கும் தேடும் மானிடரே,
இங்கே இறைமகன் இயேசு கண்டு,
இறையின் பண்பு கற்பீரே.
அங்கே அவரிடம் செல்லும் முன்பு,
அவரது மக்கள் என்பவரே,
உங்கள் செயலால் இறையின் அன்பு,
ஓங்கி ஒலிக்க, நிற்பீரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.