மாட்சிமை யாருக்கு?

மாட்சிமை யாருக்கு?

இறை வாக்கு: யோவான் 14:12-14.

  1. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
  2. நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
  3. என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.

இறை வாழ்வு:

மாட்சிமை யாவும் இறைவனுக்கே;
மைந்தன் செயலும் உரைக்கிறதே.
ஆட்சி தனக்கென நினைக்கையிலே,
அமையாது இறை அருஞ்செயலே.
வீட்சியில் கிடக்கும் மானிடமே,
விரும்பிச் செல்வது யாரிடமே?
நீட்சியில் இறை புகழ் பாடுவதே
நேரென நெஞ்சும் கூறிடுதே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.