மெய் நாடு!

ஐயம் அகற்றுதல்!

இறைவாக்கு: யோவான் 14: 4-5.

  1. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
  2. தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.

இறை வாழ்வு:

ஐயம் அகற்றுதல் அடியருக்கழகு.
அதையே தோமா செய்கிறார்.
பொய்யறியாத இயேசுவினிடத்து,
புரிந்து கொள்ளவே கேட்கிறார்.
செய்வது அறிந்தவரிடத்துப் பழகு.
செய்யும் நன்மையில் உய்கிறார்.
மெய்யெது பொய்யெது பிரித்தறிந்து,
மெய் நாடின், இறை மீட்கிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.