நீர் காண்பதுபோல் நான் காண….

நீர் காண்பதுபோல் நான் காண ….

ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;
உணவு, உடை, வீடும் கேளேன்.
பார் புகழும் பேரும் கேளேன்;
பரிசு, பொருள் என்றும் கேளேன்.
நீர் காணும் காட்சியைத்தான்,
நான் காண விரும்புகின்றேன்.
நேர்மையாய் பார்க்கும் இறையே,
நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

நிலை வாழ்வா? தண்டனையா?

நிலை வாழ்வா? தண்டனையா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:17-19.
“இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கொலை, கொள்ளை, பொய்ச் சான்று,
கொடுமை, வஞ்சம் தவறென்று,
மலைச் சட்டம் எச்சரித்தும்,
மனிதர் மீறி நடக்கின்றார்.
குலை நடுங்கும் கொடுமைகளைக்
குறித்துக் கணக்கு கொடுக்கையிலே,
நிலை வாழ்வா, தண்டனையா?
நீவிர் சொல்வீர், எது பெறுவார்?
ஆமென்.

Image may contain: sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

அருமையான உணவு!

அருமையான உணவு!

அவியல், கூட்டு, பொரியல் என்று,
அருமை உணவு சமைக்கின்றோம்.
துவையலில்கூட பல வகை செய்து,
தின்னும் பட்டியல் அமைக்கின்றோம்
எவைகள் நம்மில் இல்லையென்று,
இழந்த பண்பைப் பார்த்தோமா?
விவிலியம் கற்று, விளக்கம் பெற்று,
விண்ணின் தன்மை சேர்ப்போமா?

– கெர்சோம் செல்லையா.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

அன்புச் சினத்தில் தீங்கில்லை.
நற்செய்தி மாலை: மாற்கு 10:13-16.
“சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார். பிறகு அவர் அவர்களை அரவணைத்து, தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.”
நற்செய்தி மலர்:
இயேசுவின் சினத்தைப் பாருங்கள்;
எதற்கென நினைவு கூருங்கள்.
பேசும் இறையிலும் சினம் உண்டு.
புரிவீர் நீங்கள் இது கண்டு.
ஆசு நீக்கும் அருள் நெஞ்சின்
அன்புச் சினத்தில் தீங்கில்லை.
ஏசும் மனிதர் நெஞ்சத்தில்
இருக்கும் வெறுப்பும் ஈங்கில்லை!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…

மற்றொரு உறவைத் தேடல்…

மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:10-12.
“பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர். இயேசு அவர்களை நோக்கி, ‘ தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்’ என்றார்.”
நற்செய்தி மலர்:
மற்றொரு உறவைத் தவறாய்த் தேடல்,
மாபெரும் குற்றம் தெரிந்திடுவீர்.
கற்றவர்கூட கறை படிந்துள்ளார்;
கண்ணீருடனே திருந்திடுவீர்.
பற்றும் உறுதி கிறித்துவில் இருந்தால்,
பண்பின் வாழ்வை விரும்பிடுவீர்.
குற்றம் நீங்கித் தூய்மையில் வளர்வீர்;
குருசை நோக்கித் திரும்பிடுவீர்!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

இணைதலும் பிரிதலும்

இணைப்பது இறைவன், பிரிப்பது பிசாசு!
நற்செய்தி மாலை: மாற்கு 10:5-9.
“அதற்கு இயேசு அவர்களிடம், ‘ உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார். படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ‘ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ‘ இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சிரித்து வாழ, வேண்டும் என்று,
சீரிய கருத்து, கொண்டவரே,
கரித்து கொட்டும், மனிதர் முன்பு,
கடவுளின் வாக்கு, எண்வீரே.
விரித்து வைக்கும், வலையில் கன்று,
விழுமா என்று, பார்ப்பார் போல்,
பிரித்து வைக்கும், நோக்கில் இன்று,
பிசாசும் உழைப்பது, காண்பீரே!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

கடவுள் எங்கே?

கடவுள் எங்கே?

கடவுளைக் காண விருப்பிருந்தால்,
கடவுள் தன்னைக் காண்பிப்பார்.
காண விரும்பார் கண்டடையார்;
கலங்கி இல்லை என்றுரைப்பார்.

படைப்பின் வழியாய்க் காண்பித்தார்;
பாரிலுள்ளோர் இதைப் பார்த்தார்.
பார்த்தவர் தவறிப் பார்த்துவிட்டார்;
படைப்பைத் தெய்வமாய்ச் சேர்த்துவிட்டார்.

இடைப்பட்ட நாளில் வெளிப்பட்டார்;
இசுரவேலரைத் தேர்வு செய்தார்.
எழுதிய சட்டம் இவர்க்களித்தார்;
இவரோ எதிர்த்து அருள் இழந்தார்.

கடைசி நாட்களில் காட்சி தந்தார்;
கனிந்து மகனாய் வெளி வந்தார்.
காண விரும்பின் இயேசுவைப் பார்;
கடவுள் அன்பாய் இருக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: plant, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பிரிதல்

கருத்து வேறுபாட்டால் பிரிதல்…
நற்செய்தி மாலை: மாற்கு 10:1-4.
“இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார். பரிசேயர் அவரை அணுகி, ‘ கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ‘ என்று கேட்டு அவரைச் சோதித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழியாக, ‘ மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ‘ என்று கேட்டார். அவர்கள், ‘ மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ‘ என்று கூறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கருத்து வேறுபாட்டால் பிரிதல்,
கடவுளின் பிள்ளைக்கு முறைதானோ?
வெறுத்து ஒதுக்கி, விட்டுச் செல்லல்,
விவிலியம் கூறும் மறைதானோ?
ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்தல்,
உண்மைக் கிறித்தவம் தெரியீரோ?
பரத்தமையாலே விழுந்தவர் கோடி,
பண்பின் வாழ்வைத் தெரிவீரோ?
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

உப்பே!

கரைந்து போகும் உப்பாய்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:49-50.
“ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர். உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.
நற்செய்தி மலர்:
மறைந்து செல்லும் வேரே,
மரத்தை மண்ணில் நிறுத்தும்.
கரைந்து போகும் உப்பே,
கறியில் சுவையை இருத்தும்.
இரைந்து போடும் கூச்சல்,
எப்படி நிம்மதி கொடுக்கும்?
விரைந்து அறிவாய், அவையே,
விளம்பரப் பொய்கள் கெடுக்கும்!
ஆமென்.

Image may contain: food
LikeShow More Reactions

Comment

சிறந்த விழி!

சிறந்த விழி, இறையின் மொழி!
நற்செய்தி மாலை: மாற்கு 9:47-48.
” நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
நற்செய்தி மலர்:
இரு கண் கொண்டு பார்த்துத் தவறின்,
எந்தக் கண்ணைக் குறை சொல்வேன்?
ஒரு கண்ணோடு உம்மையடைய,
உதவும் கண்ணாய் எதைக் கொள்வேன்?
மறு கண் வேண்டி உம்மைப் பார்த்தேன்;
மன்னா, உம்மிடம் வழி கேட்டேன்.
சிறு பிழைகூடச் செய்யத் தடுக்கும்,
சிறந்த விழியாம் மொழி கேட்பேன்!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment