நிலை வாழ்வா? தண்டனையா?

நிலை வாழ்வா? தண்டனையா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:17-19.
“இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
கொலை, கொள்ளை, பொய்ச் சான்று,
கொடுமை, வஞ்சம் தவறென்று,
மலைச் சட்டம் எச்சரித்தும்,
மனிதர் மீறி நடக்கின்றார்.
குலை நடுங்கும் கொடுமைகளைக்
குறித்துக் கணக்கு கொடுக்கையிலே,
நிலை வாழ்வா, தண்டனையா?
நீவிர் சொல்வீர், எது பெறுவார்?
ஆமென்.

Image may contain: sky, outdoor and nature
LikeShow More Reactions

Comment

Leave a Reply