அறுபத்து ஐந்து முடித்து….

இருபத்தியேழு ஆண்டுகள் வெறுத்தேன்;
இல்லை இறைவன், என்று மறுத்தேன்.
பொருளியல் கற்று, பொருளைச் சேர்த்தேன்;
போனபின், இழிந்த நிலையும் பார்த்தேன்.
திருமறை மட்டுமே சொத்தாய் ஏற்றேன்;
தெய்வ அருளால் தெளிவைப் பெற்றேன்.
அறுபத்து ஐந்து ஆண்டுகள் முடித்தேன்.
ஆண்டவர் அரசு அமையவே துடித்தேன்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person , sunglasses, beard, glasses and close-up

நாளை நடப்பதை நாம் அறிவோமா?

நாளை நடப்பதை நாம் அறிவோமா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:32-34.
“அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், ‘ இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
நாளை நடப்பதை, நாம் அறிவோமா?
நம்பிக்கையால் முன்னறிவோமா?
வேளை அறிந்து, முன்னே விரைந்த,
வேந்தன் வாக்கை, அறிவிப்போமா?
ஆளை மீட்கும், அவரது பணியில்,
அன்பை விதைக்க, முன் வருவோமா?
தாளைப் பணிந்து, நாமும் கேட்டால்,
தருவார் விளைச்சல், பயன் பெறுவோமா?
ஆமென்.

Image may contain: one or more people and text