கடவுள் எங்கே?

கடவுள் எங்கே?

கடவுளைக் காண விருப்பிருந்தால்,
கடவுள் தன்னைக் காண்பிப்பார்.
காண விரும்பார் கண்டடையார்;
கலங்கி இல்லை என்றுரைப்பார்.

படைப்பின் வழியாய்க் காண்பித்தார்;
பாரிலுள்ளோர் இதைப் பார்த்தார்.
பார்த்தவர் தவறிப் பார்த்துவிட்டார்;
படைப்பைத் தெய்வமாய்ச் சேர்த்துவிட்டார்.

இடைப்பட்ட நாளில் வெளிப்பட்டார்;
இசுரவேலரைத் தேர்வு செய்தார்.
எழுதிய சட்டம் இவர்க்களித்தார்;
இவரோ எதிர்த்து அருள் இழந்தார்.

கடைசி நாட்களில் காட்சி தந்தார்;
கனிந்து மகனாய் வெளி வந்தார்.
காண விரும்பின் இயேசுவைப் பார்;
கடவுள் அன்பாய் இருக்கின்றார்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: plant, outdoor and nature
LikeShow More Reactions

Comment

Leave a Reply