நீர் காண்பதுபோல் நான் காண….

நீர் காண்பதுபோல் நான் காண ….

ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;
உணவு, உடை, வீடும் கேளேன்.
பார் புகழும் பேரும் கேளேன்;
பரிசு, பொருள் என்றும் கேளேன்.
நீர் காணும் காட்சியைத்தான்,
நான் காண விரும்புகின்றேன்.
நேர்மையாய் பார்க்கும் இறையே,
நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people and close-up
LikeShow More Reactions

Comment

Leave a Reply