துபாய் மன்னர்

உடலைக் காட்டி ஊரை விழுங்கும்,
உயர்தரக் கூத்து ஆடிகளே,
கடலில் இறங்கும் மன்னரின் பண்பில்
கால் பங்காவது தேடுங்களே!

Image may contain: 1 person

மக்களுடன் மக்களாய் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல்,இன்று உலகமே திரும்பி பார்க்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் அதிபர் என்ற கர்வம் இல்லாமல்சாதாரணமாய் துபாய் அதிபர்.மாண்புமிகு.சேக் முகமது பின் ராசித் அல் மக்தும் அவர்கள்.கடலில் குளிக்கும் காட்சி

ஊசியின் காதினுள் ஒட்டகமா?

ஊசியின் காதினுள் ஒட்டகமா?
நற்செய்தி மாலை: மாற்கு 10:22-25.
“இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், ‘ செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் ‘ என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, ‘ பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
தூசினால் சிவந்த கண்ணால் பார்த்தேன்;
தூய்மை மறுத்து, வெறுத்துத் துறந்தேன்.
காசினால் யாவையும் வாங்க முயன்றேன்;
கடவுளும் வேண்டாம் என்று பறந்தேன்.
ஊசியின் காதினுள் நுழைவேன் என்றேன்;
ஒட்டகமாகி நான் உண்மை மறந்தேன்.
பாசியாய்ப் படரும் அழுக்கால் நிறைந்தேன்;
பரிந்து நீர் கழுவும், இலையேல் இறப்பேன்!
ஆமென்.
No automatic alt text available.