The Truth

கிறித்துவின் அருளைப் பெறுவதற்குக்
கேட்போமா நாம் நற்செய்தி?
வெறித்தனச் செயலை விடுவதற்கு,
வேண்டும் நமக்கு அருட்செய்தி!
நல்வாழ்த்து:
வாக்கருளும் மைந்தனே போற்றி;
வாழ்விக்கும் தந்தையே போற்றி.
காக்க வரும் ஆவியர் போற்றி;
காலமெலாம் இறையே போற்றி!
நல்வாக்கு:மத்தேயு 25:5-7.
“மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், ‘ இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள் ‘ என்ற உரத்த குரல் ஒலித்தது.  மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர்.”
நல்வாழ்வு:

இல்லாத எண்ணெய்
இருப்பதாய் எண்ணி,
விளக்கைக் கொளுத்துகின்றார்;
வெட்கம் கொள்கின்றார்!
கல்லாத மூடர்
வரிசையில் நின்று,
கருத்தை இழக்கின்றார்;
கைவிடப் படுகின்றார்;
எல்லோரும் மீள
ஏங்கும் இறைவன்
எண்ணெய் தருகின்றார்;
ஏற்பவர் மகிழ்கின்றார்.
நல்லாயன் சொல்லே,
விளக்கின் எண்ணெய்.
நம்பினோர் நிறைக்கின்றார்;
நல்லொளி கொடுக்கின்றார்!
ஆமென்.

 

நற்செய்தி

தள்ளுபடியாகுதே
உண்மை;
கொள்ளைபோகுதே
நன்மை.
கள்ளத்தனமே
வாழ்க்கை;
வெள்ளையாக்குமே
என்னை!
நல்வாழ்த்து:
காலையிலும் புகழ்வேன்;
மாலையிலும் புகழ்வேன்.
வேலையிலும் புகழ்வேன், எவ்
வேளையிலும் புகழ்வேன்!
பாலையிலும் புகழ்வேன்;
பசியினிலும் புகழ்வேன்.
ஓலையிலே புகழ்ந்தேன், இனி
ஓய்வின்றி புகழ்வேன்!
நல்வாக்கு:மத்தேயு 25:1-4.
பத்து தோழியர் உவமை

”அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.”

நல்வாழ்வு:
எங்கும் இருளை அகற்றுதல்தான்,
இறைப்பணி என்று தெரிந்திடுவோம்.
இங்கே இதனைச் செய்யாமல்,
இருப்பதற்காகவும் வருந்திடுவோம்.
பொங்கும் அருளாய் புது எண்ணெய்,
புனிதர் நமக்குத் தருகின்றார்.
மங்கா ஒளியை நாம் கொடுக்க,
மண் விளக்கை நிரப்பிடுவோம்!
ஆமென்.

நற்செய்தி

தூண்டிலும் வலையும் துரத்துகையில்,
தூயவர் வாக்கே மீட்பு தரும்.
வேண்டுதலோடு நீர் வாரும்.
விருப்பம் கூடும், வாழ்வு பெறும்!
நல்வாழ்த்து:
மீட்பரைப் புகழ வாருங்களே.
மீட்பில் மகிழ வாருங்களே.
கேட்பவர் எவரும் மீட்புறுவார்;
கிறித்துவைப் புகழ்ந்து பாருங்களே!
நல்வாக்கு:
மத்தேயு 24:45-47.
நம்பிக்கைக்குரிய பணியாளர்

” தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

நல்வாழ்வு:
உண்மை எங்கு இருக்கிறதோ,
உயர்வு ஒருநாள் நிச்சயமே.
பண்பு எங்கு தழைக்கிறதோ,
படைத்தவர் இருப்பது அவ்விடமே.
கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடவுள் வந்தால் என்சொல்வோம்?
எண்ணிப் பார்த்து இனியேனும்
இறைவாக்கின்படி வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

நல்வழி காட்டும் நல்லவர் இயேசு

நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.

சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;

சிறந்த பயனை அணிந்திடுவோம்!

நல்வாழ்த்து:

தீமைகளையும் நன்மையாக்கும்

தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.

ஊமையாக இருந்தது போதும்;

உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!

நல்வாக்கு;

மத்தேயு 24:43-44.

“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

நல்வாழ்வு:

திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,

திருடனின் உவமை உரைத்தீரா?

அருமையான காலமும் தந்து,

அருட்பணி செய்ய வைத்தீரா?

வருகை எப்போதென்று அறியேன்;

வரும்போதென்னை அழைப்பீரா?

ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;

உமது அரசில் நினைப்பீரா?

ஆமென்.

The Truth

இறைவனின் அருளைக் கேட்போமா?
இன்றும் இயேசுவைப் பார்ப்போமா?
மறைவழி நடக்க முயல்வோமா?
மன்னிப்பருள்வார், மகிழ்வோமா?
நல்வாழ்த்து:
இயேசுவைப் புகழ்ந்து எழுதுவதே
எனக்குப் பணியும், இன்பமுமாம்.
நேயனைப் பார்த்துப் பணிவதுவே
நமது வாழ்வின் பேரின்பமாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:40-42.
“இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு::
நாழிகை அறியோம், நாளும் அறியோம்.
நம்மை மீட்க வருவார், அறிவோம்.
வாழிய அவர் பணி வாழிய என்று
வாழ்ந்து நாமும் விழித்திருப்போம்!
ஆமென்.

நற்செய்தி

நம்பிக்கை தருவது இறைவாக்கு;
நாமும் பெறுவோம் நல்வாழ்வு!
நல்வாழ்த்து:
மீட்பர் இயேசுவைப் போற்றுகிறேன்;
மீண்டும் மீண்டும் போற்றுகிறேன்.
கேட்பவர் நீங்களும் சேர்ந்திடலாம்.
கிறித்து புகழைப் பாடிடலாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:37-39.
“நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள்.”
நல்வாழ்வு:
உண்டு குடித்து, உறங்கி எழுந்து
ஊழலில் உழல்கின்றார்.
பெண்டிரைத் தேடி பேதைமை போற்றி
பெயரை இழக்கின்றார்.
கண்டு துடிக்கும் கடவுளின் விருப்பைக்
கருத்தாய்ச் சொல்பவர் யார்?
தொண்டு புரிதலே வாழ்க்கையென்று,
தூய்மையில் வாழ்பவர் யார்?
ஆமென்.

நாள்தோறும் நற்செய்தி

கேட்க விரும்பும் நெஞ்சம் கொண்டு
கிறித்துவின் வாக்கைக் கேட்போமா?
ஏக்கம் நீங்கி, இன்பம் பெற்று
இறைமகனைப் புகழ்வோமா?
நல்வாழ்த்து:
வறியவர்க்கு வாழ்வளிக்கும்
வல்ல இறையே போற்றுகிறேன்.
நெறி தவறாத வாழ்வைக் கேட்டு,
நித்தம் உம்மைப் புகழுகிறேன்.
குறி தவறியே வாழ்ந்திருந்தும்
குறை களைந்தீர், போற்றுகிறேன்.
அறிவுப் பாதையில் அழைத்தீர்;
அன்பில் நடந்து புகழுகிறேன்!
நல்வாக்கு:
மத்தேயு 24:36
மானிடமகன் வரும் நாளும் வேளையும்:

 ” அந்த நாளையும் வேளையையும் பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது”
நல்வாழ்த்து:
எந்த நாள் வருவீரென்று,
அந்த நிலையில் அறியவில்லை.
இந்த நாளை இன்றறிவீர்;
வந்து மீளும் இறைமகனே!
ஆமென்.

நற்செய்தி

இன்று கேட்கும் இறைவனின் வாக்கு
நன்கு நம்மைச் சீராக்கிடட்டும்.
என்று வேண்டி எழுதும் நானும்
அன்பில்வாழ அருள் பெருகட்டும்!

நல்வாழ்த்து:
ஒழியா அன்பில் நடப்பதுதானே
உண்மையான இறைவழிபாடு.
வழியாய் வந்த கிறித்துவைத்தானே
வணங்கிப் புகழ்தல் நற்பண்பாடு!

நல்வாக்கு:
மத்தேயு 24:34-35.
”இவை அனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.”

நல்வாழ்வு:
மண்ணழியும்,
மரம் செடிகொடியும் அழியும்.
விண்ணழியும்,
விளக்குச் சுடரும் அழியும்.
கண்ணுள் வந்த
காட்சிகள் அழிய, எதுதான் நிற்கும்?
எண்ணுகின்றேன்;
இயேசுவின் வாக்கு நிலைக்கக் கண்டேன்!
ஆமென்.
www.thetruthintamil.com

 

நற்செய்தி

மீண்டும் கேட்போம் நற்செய்தி;

ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி!

நல்வாழ்த்து:

நலமுடன் காக்கும் இறையே போற்றி;

நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி.

அலகையின் சதியை உடைப்பேன் போற்றி;

ஆவியர் வழியில் நடப்பேமீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.ன் போற்றி!

நல்வாக்கு: மத்தேயு 24:32-33.

அத்தி மர உவமை:

”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” நல்வாழ்வு: அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்மீண்டும் கேட்போம் நற்செய்தி; ஆண்டவர் தருவார் உயிர் மீட்சி! நல்வாழ்த்து; நலமுடன் காக்கும் இறையே போற்றி; நல்வாழ்வருளும் இயேசுவே போற்றி. அலகையின் சதியை உடைப்பேன் போற்றி; ஆவியர் வழியில் நடப்பேன் போற்றி! நல்வாக்கு: மத்தேயு 24:32-33. அத்தி மர உவமை: ”அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

” நல்வாழ்வு:

அத்திமரம் துளிர்விடுதே அவர் வருகை நெருங்கிடுதே. தித்திக்கும் தேனமுதத் திருவாக்கும் நிறைவுறுதே. இத்தரையின் மாந்தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென்.

www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.தர்களே, இனியேனும் வாருங்களே. வைத்திருக்கும் வாழ்வடைவீர்; வந்தவரைப் பாருங்களே! ஆமென். www.thetruthintamil.com Gershom Chelliah, 24, Secretariat Colony Main Road, Rettery, Chennai-99.

நற்செய்தி

திரண்ட செல்வம் தராத இன்பம்,
தெய்வ வாக்கால் வருவது காணும்!
வறண்ட வாழ்வைச் செழிக்க வைக்கும்
வல்ல இறையை வந்து பணியும்!

நல்வாழ்த்து:
வாழ்த்துகிறேன் இயேசையா;
வந்தென்னுள் ஆளையா.
தாழ்த்துகிறேன் நெஞ்சையா;
தங்கி எனை மீளையா!

நல்வாக்கு:மத்தேயு/Matthew 24:29-31.
மானிடமகன் வருகை:
” துன்பநாள்கள் முடிந்த உடனே கதிரவன் இருண்டுவிடும்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்திலிருந்து விழும்; வான்வெளிக்கோள்கள் அதிரும்.பின்பு வானத்தில் மானிட மகன் வருகையின் அறிகுறி தோன்றும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் வானத்தின் மேகங்களின்மீது வருவார். இதைக் காணும் மண்ணுலகிலுள்ள எல்லாக் குலத்தவரும் மாரடித்துப் புலம்புவர். அவர் தம் தூதரைப் பெரிய எக்காளத்துடன் அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்கள்.”
நல்வாழ்வு:
இயற்கை அசையும் நேரத்திலே,
இறைமகன் வருவார் வானத்திலே.
வியக்கும் செயல்கள் காண்கையிலே,
விண்ணில் சேர்வோம் நண்பர்களே.
மயக்கும் உலகு மறைகையிலே,
மனம் வருந்துதல் பயனிலையே.
தயக்கம் தவிர்த்து இப்போதே,
தருவீர் நெஞ்சை இயேசுவுக்கே!
ஆமென்.

(பின் குறிப்பு:
பயணம் அழைப்பதால் செல்கின்றேன்.
படைத்தவர் அருளில் மகிழ்கின்றேன்.
இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை,
இறைவன் காப்பார், வேண்டுகிறேன்!
– கெர்சோம் செல்லையா)