The Truth

இறைவனின் அருளைக் கேட்போமா?
இன்றும் இயேசுவைப் பார்ப்போமா?
மறைவழி நடக்க முயல்வோமா?
மன்னிப்பருள்வார், மகிழ்வோமா?
நல்வாழ்த்து:
இயேசுவைப் புகழ்ந்து எழுதுவதே
எனக்குப் பணியும், இன்பமுமாம்.
நேயனைப் பார்த்துப் பணிவதுவே
நமது வாழ்வின் பேரின்பமாம்!
நல்வாக்கு:
மத்தேயு 24:40-42.
“இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.”
நல்வாழ்வு::
நாழிகை அறியோம், நாளும் அறியோம்.
நம்மை மீட்க வருவார், அறிவோம்.
வாழிய அவர் பணி வாழிய என்று
வாழ்ந்து நாமும் விழித்திருப்போம்!
ஆமென்.

Leave a Reply