நல்வழி காட்டும் நல்லவர் இயேசு

நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.

சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;

சிறந்த பயனை அணிந்திடுவோம்!

நல்வாழ்த்து:

தீமைகளையும் நன்மையாக்கும்

தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.

ஊமையாக இருந்தது போதும்;

உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!

நல்வாக்கு;

மத்தேயு 24:43-44.

“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”

நல்வாழ்வு:

திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,

திருடனின் உவமை உரைத்தீரா?

அருமையான காலமும் தந்து,

அருட்பணி செய்ய வைத்தீரா?

வருகை எப்போதென்று அறியேன்;

வரும்போதென்னை அழைப்பீரா?

ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;

உமது அரசில் நினைப்பீரா?

ஆமென்.

Leave a Reply