நல்வழி காட்டும் நல்லவர் இயேசு
நம்முள் உண்டு, பணிந்திடுவோம்.
சொல்வழி அறிந்து செல்வதே வாழ்வு;
சிறந்த பயனை அணிந்திடுவோம்!
நல்வாழ்த்து:
தீமைகளையும் நன்மையாக்கும்
தெய்வ அருளால் நிறைந்திடுவோம்.
ஊமையாக இருந்தது போதும்;
உண்மைத் தெய்வம் புகழ்ந்திடுவோம்!
நல்வாக்கு;
மத்தேயு 24:43-44.
“இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
நல்வாழ்வு:
திருடனாய் வாழ்ந்த என்னை உணர்த்த,
திருடனின் உவமை உரைத்தீரா?
அருமையான காலமும் தந்து,
அருட்பணி செய்ய வைத்தீரா?
வருகை எப்போதென்று அறியேன்;
வரும்போதென்னை அழைப்பீரா?
ஒருமுறைகூட உம்மைக் கேட்பேன்;
உமது அரசில் நினைப்பீரா?
ஆமென்.