நற்செய்தி

தூண்டிலும் வலையும் துரத்துகையில்,
தூயவர் வாக்கே மீட்பு தரும்.
வேண்டுதலோடு நீர் வாரும்.
விருப்பம் கூடும், வாழ்வு பெறும்!
நல்வாழ்த்து:
மீட்பரைப் புகழ வாருங்களே.
மீட்பில் மகிழ வாருங்களே.
கேட்பவர் எவரும் மீட்புறுவார்;
கிறித்துவைப் புகழ்ந்து பாருங்களே!
நல்வாக்கு:
மத்தேயு 24:45-47.
நம்பிக்கைக்குரிய பணியாளர்

” தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர்.அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

நல்வாழ்வு:
உண்மை எங்கு இருக்கிறதோ,
உயர்வு ஒருநாள் நிச்சயமே.
பண்பு எங்கு தழைக்கிறதோ,
படைத்தவர் இருப்பது அவ்விடமே.
கண்ணிமைக்கும் நேரத்திலே,
கடவுள் வந்தால் என்சொல்வோம்?
எண்ணிப் பார்த்து இனியேனும்
இறைவாக்கின்படி வாழ்ந்திடுவோம்!
ஆமென்.

Leave a Reply