நற்செய்தி

தள்ளுபடியாகுதே
உண்மை;
கொள்ளைபோகுதே
நன்மை.
கள்ளத்தனமே
வாழ்க்கை;
வெள்ளையாக்குமே
என்னை!
நல்வாழ்த்து:
காலையிலும் புகழ்வேன்;
மாலையிலும் புகழ்வேன்.
வேலையிலும் புகழ்வேன், எவ்
வேளையிலும் புகழ்வேன்!
பாலையிலும் புகழ்வேன்;
பசியினிலும் புகழ்வேன்.
ஓலையிலே புகழ்ந்தேன், இனி
ஓய்வின்றி புகழ்வேன்!
நல்வாக்கு:மத்தேயு 25:1-4.
பத்து தோழியர் உவமை

”அந்நாளில் விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர்.”

நல்வாழ்வு:
எங்கும் இருளை அகற்றுதல்தான்,
இறைப்பணி என்று தெரிந்திடுவோம்.
இங்கே இதனைச் செய்யாமல்,
இருப்பதற்காகவும் வருந்திடுவோம்.
பொங்கும் அருளாய் புது எண்ணெய்,
புனிதர் நமக்குத் தருகின்றார்.
மங்கா ஒளியை நாம் கொடுக்க,
மண் விளக்கை நிரப்பிடுவோம்!
ஆமென்.

Leave a Reply