நல்வழி:
இப்புவியில் இறங்கி வந்த,
இறைமகனை நோக்கிப் பார்.
எப்பண்பில் அவர் இருந்தார்,
என்றெண்ணித் தூக்கிப் பார்.
தப்பிதங்கள் பொறுத்தருளும்,
தன்மைகளை ஆக்கிப் பார்.
அப்புறம் நீ காண்பதென்ன?
அதிசயங்கள், தேக்கிப் பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நல்வழி:
இப்புவியில் இறங்கி வந்த,
இறைமகனை நோக்கிப் பார்.
எப்பண்பில் அவர் இருந்தார்,
என்றெண்ணித் தூக்கிப் பார்.
தப்பிதங்கள் பொறுத்தருளும்,
தன்மைகளை ஆக்கிப் பார்.
அப்புறம் நீ காண்பதென்ன?
அதிசயங்கள், தேக்கிப் பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நாட்டம் கொண்டோர் நாடி வருவார்
!நற்செய்தி: யோவான்: 6:37.37.
பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.
நல்வழி:
கூட்டம் கூட்டி, நாட்டைக் கவரும்,
கொள்கை அல்ல கிறித்தவம்.
ஆட்டம் காட்டி ஆளை மயக்கும்,
அவலமும் அல்ல கிறித்தவம்.
வாட்டம் ஓட்டி, வாழ்வைக் காட்டும்,
வழி முறையே கிறித்தவம்.
நாட்டம் கொண்டோர் நாடி வருவர்;
நன்மை செய்வதே, கிறித்தவம்!
ஆமென்
.-கெர்சோம் செல்லையா.
நம்பவில்லை!
நற்செய்தி: யோவான் 6:36.
நல்வழி:
கண்டோரும் நம்பவில்லை,
காணாரும் விரும்பவில்லை.
தண்டோரா போட்டுரைத்தும்,
தாய் நாட்டார் ஏற்கவில்லை.
என்றாலும் உரைக்கின்றோம்;
இறையன்பைத் திறக்கின்றோம்.
இன்றளவும் பயனில்லை.
எனினும் நாம் தோற்பதில்லை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
உயிருணவு!
நற்செய்தி: யோவான்: 6:35.
நல்வாழ்வு:
மும்முறை வருகிற பசி விடாய்ப்பு,
முறையாய் என்னில் வருமுன்பு,
இம்முறை இல்லை என்றுரையாது,
இன்னீர் உணவு தருபவரே,
உம்மிடம் வந்தோர் ஒரு பொழுதாவது,
உணவிற்கலைந்து வருந்துவது,
நம்புதற்கரிது என்னும்படிக்கு,
நன்னீர் உணவு தருவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நல்வழி:
நன்னில உணவைப் பகிர்ந்து உண்டால்,
நல் வாழ்வமையும், நாடும் மகிழும்.
பொன் பொருள் கொடாத பெருவாழ்வின்பம்,
புவியில் பெருகும், புன்னகை மலரும்.
இன்னிலத்தார்க்கு இவ்வறிவூட்ட,
இறையே வந்தார்; தன்னுயிர் ஈந்தார்.
அன்னார் உடலே அருவிருந்தாகும்;
அதுபோலளிப்போம், பெருவாழ்வாகும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
உணவிற்காக மட்டும்!
நற்செய்தி: யோவான்: 6:30-31.
நல்வழி:
உணவு கிடைக்கும் என்பதற்காக,
ஒருவர் இறையை நாடுவது,
நினைவு தெரிந்த நாளிலிருந்து,
நிகழும் அவலம், உழைப்போமா?
கனவு கண்டு கையையும் கட்டி,
கடவுள் மேல் பழி போடுவது,
தினவு அரிக்கும் திட உடலாகும்,
திருந்தி, இறையை அழைப்போமா?
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
எதைச் செய்தல் இறைவிருப்பு?
நற்செய்தி: யோவான் 6:28-29.
நல்வழி:
எதைச் செய்தல், இறைவன் விருப்பு,
என்று எண்ணும் மனிதராவோம்.
அதைச் செய்யும், வல்லமை பெற்று,
ஆண்டவரருளில் நிறைந்திடுவோம்.
கதைப் புனையும் கருத்தினை விட்டு,
கடவுளை மட்டும் நம்பிடுவோம்.
இதைச் செய்தால் இறைவன் ஏற்பார்.
ஏழைக்கென்றும் திறந்திடுவோம்!
ஆமென்.
பெருவாழ்வு!
நற்செய்தி: யோவான் 6:27.
நல்வழி:
உண்ணும் உணவில் உண்மை உண்டோ?
உழைப்பை இறைவன் மதிக்கிறார்.
பண்ணும் செயலில் நேர்மை உண்டோ?
பணியார் உணரவும் பதிக்கிறார்.
எண்ணம் செயலில் தூய்மைதானே,
இறைமகன் இருப்பின் முத்திரை.
கண்ணால் காணும் காலம் வரையில்,
கனியாய் இருப்போம் இத்தரை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
உணவைத் தேடி!
நற்செய்தி: யோவான் 6:23-26.
நல்வழி:
இல்லா உணவு கிடைக்காதா?
ஏங்கித் திரியும் மானிடரே,
நல்லாயன்தான் தருகின்றார்.
நம்பி நடந்து பணிவீரே.
எல்லோருக்கும் உணவளித்தல்,
இறையின் திருப்பணி அறிவீரே.
பொல்லா ஐயம் இனி வேண்டாம்,
புரிந்தால் மீட்பு பெறுவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
மாற்றம் தேவை, ஊழியரில் மாற்றம் தேவை!
ஆறுதல் அளிக்கிற ஆவியர்தான்,
அறிவிக்கிறார், தெரிவிக்கிறார்.
மாறுதல் விரும்பும் அவரேதான்;
மாற்றுகிறார், மன மாற்றுகிறார்.
கூறுதல் நம் பணி என்பதில்தான்,
குழம்பி, பலபேர் தவறுகிறார்.
ஏறுதல் எங்கே? குரிசில் தான்;
இவ்வறிவுள்ளோர், மாற்றுகிறார்!
-கெர்சோம் செல்லையா.