விண்ணுணவு!

நல்வழி:


நன்னில உணவைப் பகிர்ந்து உண்டால்,

 நல் வாழ்வமையும், நாடும் மகிழும்.

பொன் பொருள் கொடாத பெருவாழ்வின்பம்,

புவியில் பெருகும், புன்னகை மலரும்.

இன்னிலத்தார்க்கு இவ்வறிவூட்ட,

இறையே வந்தார்; தன்னுயிர் ஈந்தார்.

அன்னார் உடலே அருவிருந்தாகும்;

அதுபோலளிப்போம், பெருவாழ்வாகும்!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

Leave a Reply