எண்பதும்! இருபதும்!

எண்பதும் இருபதும்!


ஐந்தில் ஒன்றை அடிக்க இன்று,

ஐந்தில் நான்கு துடிக்கிறது.

மந்தை ஒன்றைத் திரட்டிச் சென்று,

மத வெறியாலே பிடிக்கிறது.

“இந்திய நாட்டின் மக்கள் ஒன்று”

என்னும் நினைப்பே வெடிக்கிறது.

எந்தன் காலே, தலைமேல் நின்று,

என் உயிரைக் குடிக்கிறது!


-கெர்சோம் செல்லையா.

மெய்!

மெய் அறிவீர்!நற்செய்தி: யோவான்: 6:45-47.45.

எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.46. தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.47. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

நல்வழி:

மெய்மை நாடின், மெய்மை காண்பார்;

மேன்மை வாழ்வு பெற்றிடுவார்.

பொய்மை தேடின், பொய்மை காண்பார்;

பொல்லா வழியே கற்றிடுவார்.

தூய்மைப் பண்பே தெய்வம் என்பார்,

திருமகன் ஏசுவில் கண்டிடுவார்.

வாய்மை எங்கே? அங்கே, இறை பார்!

வராதார் அழிவே அண்டிடுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இழுக்கும் இறை!

இழுக்கும் இறைவன்!
நற்செய்தி: யோவான் 6:43-44.
43. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம்.
44. என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.
நல்வழி:
தந்தை இழுக்க, மைந்தன் அழைப்பார்.
தாவி அணைக்கும் ஆவியர் உழைப்பார்.
விந்தை அரசுள் வேந்தன் நுழைப்பார்.
விடுதலையாளர் கண் விழிப்பார்.
நிந்தை நீக்கும் இறைமகன் வருவார்.
நேர்மைக்குரிய பரிசைத் தருவார்.
எந்தை தாயும் உறவும் பெறுவார்.
இறையருளாளர் இன்பமுறுவார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

முறுமுறுப்பு!

யோவான்

நல்வழி: 6:41-42.


முன்பு நின்று பேச மறுப்பார்;

மூக்கு திருப்பி முறு முறுப்பார்.

நன்கு இவரைப் புரிந்திருப்பார்,

நட்பு கொள்ளவும் வெறுப்பார்.

அன்று யூதர் முறு முறுத்தார். 

அழிவு காண இறை மறுத்தார்.

சென்று போன நிகழ்வறிந்தார்,

சிறிதளவும் முறு முறுக்கார்! 

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

இன்று தேர்தல் நாள்!

இன்று தேர்தல் நாள்!


விலை பேச வருபவரை,

விரும்புகிற மக்கள் இங்கே.

நிலை மாற உழைக்கின்ற,

நெறியாளர் இன்று எங்கே?

கலையாத உடை உடுத்தும்,

கட்சியினர் உண்டு இங்கே.

தலையான தொண்டுள்ளம்,

தமிழகத்தில் எங்கே எங்கே?


-கெர்சோம் செல்லையா. 

நாடு இங்கே! நாடிங்கே!
நற்செய்தி: யோவான் 6:39-40.39.

அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசிநாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
40. குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

நல்வழி:

ஒரு சிலர் வாழ ஊரையே அழிக்கும்,

உண்மையை உணரார் நாடு இங்கே.

வறுமையில் வாடும் அனைவருக்களிக்கும்,

வானருள் மீட்பை நாடிங்கே!

பெருந்திரள் செல்வம் வாழ்வென உழைக்கும்,

பேதையர் ஆடும் நாடு இங்கே.

சிறுவன் என்றாலும் சென்றே அழைக்கும்,

சீரருள் மீட்பரை நாடிங்கே!   


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.

யோவான் 6:38.

 நல்வழி:

இப்புவியில் இறங்கி வந்த,

இறைமகனை நோக்கிப் பார்.

எப்பண்பில் அவர் இருந்தார்,

என்றெண்ணித் தூக்கிப் பார்.

தப்பிதங்கள் பொறுத்தருளும்,

தன்மைகளை ஆக்கிப் பார்.

அப்புறம் நீ காண்பதென்ன?

அதிசயங்கள், தேக்கிப் பார்!


ஆமென்.

-கெர்சோம் செல்லையா.  

நாட்டம் கொண்டோர்…

நாட்டம் கொண்டோர் நாடி வருவார்

!நற்செய்தி: யோவான்: 6:37.37.

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

நல்வழி:

கூட்டம் கூட்டி, நாட்டைக் கவரும்,

கொள்கை அல்ல கிறித்தவம்.

ஆட்டம் காட்டி ஆளை மயக்கும்,

அவலமும் அல்ல கிறித்தவம்.

வாட்டம் ஓட்டி, வாழ்வைக் காட்டும்,

வழி முறையே கிறித்தவம்.

நாட்டம் கொண்டோர் நாடி வருவர்;

நன்மை செய்வதே, கிறித்தவம்!

ஆமென்

.-கெர்சோம் செல்லையா.

என்றாலும் நம்பவில்லை!

நம்பவில்லை!
நற்செய்தி: யோவான் 6:36.

நல்வழி:


கண்டோரும் நம்பவில்லை, 

காணாரும் விரும்பவில்லை.

தண்டோரா போட்டுரைத்தும்,

தாய் நாட்டார் ஏற்கவில்லை.

என்றாலும் உரைக்கின்றோம்;

இறையன்பைத் திறக்கின்றோம்.

இன்றளவும் பயனில்லை.

எனினும் நாம் தோற்பதில்லை!


ஆமென்.


-கெர்சோம் செல்லையா.