நாட்டம் கொண்டோர்…

நாட்டம் கொண்டோர் நாடி வருவார்

!நற்செய்தி: யோவான்: 6:37.37.

பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.

நல்வழி:

கூட்டம் கூட்டி, நாட்டைக் கவரும்,

கொள்கை அல்ல கிறித்தவம்.

ஆட்டம் காட்டி ஆளை மயக்கும்,

அவலமும் அல்ல கிறித்தவம்.

வாட்டம் ஓட்டி, வாழ்வைக் காட்டும்,

வழி முறையே கிறித்தவம்.

நாட்டம் கொண்டோர் நாடி வருவர்;

நன்மை செய்வதே, கிறித்தவம்!

ஆமென்

.-கெர்சோம் செல்லையா.

Leave a Reply