- யோவான் 11:41-42
நல்வாழ்வு:
நன்றி என்ற நல்ல பண்பு,
நல்கிடுமே உயர்வு.
இன்று இது இல்லை உள்ளில்;
இதனால்தான் அயர்வு.
சென்று போன நாட்களிலே,
செயல்படா இச் சிறப்பு,
குன்று போல உயருகையில்,
கோடி நன்மை திறப்பு!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
The Truth Will Make You Free
நல்வாழ்வு:
நன்றி என்ற நல்ல பண்பு,
நல்கிடுமே உயர்வு.
இன்று இது இல்லை உள்ளில்;
இதனால்தான் அயர்வு.
சென்று போன நாட்களிலே,
செயல்படா இச் சிறப்பு,
குன்று போல உயருகையில்,
கோடி நன்மை திறப்பு!
ஆமென்.
கெர்சோம் செல்லையா.
நம்புவோம்! நல் வாழ்வடைவோம்!
நற்செய்தி: யோவான் 11: 38-40.
38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
நல்வாழ்வு:
இன்பம் மட்டும் நாடிச் சென்றோர்,
இறை மறந்து வீழ்கையில்,
அன்பர் இயேசு தேடி வந்து,
அருட் பற்று ஊற்றுவார்.
துன்பம் மட்டும் ஆடக் கண்டோர்,
தெய்வப் பற்று கொள்கையில்,
நண்பர் என்று உடனிருந்து,
நன்மையாக மாற்றுவார்.
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நற்செய்தி: யோவான் 11:36-37.
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
நல்வாழ்வு:
வாயும் நெஞ்சும் நாறும் போது,
வாய்மை எங்ஙனம் மலரும்?
பாயும் வஞ்சம் ஊறும் சூது;
பண்பழிய, உளறும்.
தீயும் பஞ்சும் சேரும் போது,
தெரியும் யாவும் எரியும்.
ஆயும் பிஞ்சும் கூறும் தூது;
அழுக்கழிய, பிரியும்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
நற்செய்தி: யோவான் 11:33-35.
இனி காணோம் என்கிற எண்ணம்,
ஈரக்குலையை இறுக்குகையில்,
மனிதர் விலங்கு பறவைகளும்,
மடிவார்முன் கலங்கிடுமே.
பிணி, மூப்பு, சாவின் முன்னம்,
புது வாழ்வு தெரியுமெனில்,
கனி உண்பார் களிப்பதுபோல்,
கண்ணீரும் துலங்கிடுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
கால் பிடித்தல்!
செய்யுட் செய்தி!
செய்தி:யோவான் 11: 31-32.
31. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
செய்யுள்:
மார்த்தாள் சொன்ன சொல் எடுத்து,
மரியாள் கூறி நில்லாது,
பார்ப்பார் என்ற கவலை விடுத்து,
பற்றில் கால் பிடிக்கிறார்.
ஆர்ப்பார் தந்த வாக்கினடுத்து,
அறிந்து மட்டும் செல்லாது,
தீர்ப்பார் குறைகள் எனப் படுத்து,
தெய்வக் கால் பிடிக்க, பார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அழைக்கும் இயேசு!
செய்தி; யோவான் 11:28-30.
செய்யுள்:
இறைமகன் வருகிறார் பாருங்கள்.
இயேசு அழைக்கிறார் வாருங்கள்.
குறையினை நீக்குவார் பாருங்கள்.
கொடுக்கும் ஆசிகள் வாருங்கள்.
அறையினில் அழுபவர் வாருங்கள்.
ஆண்டவர் அதிசயம் பாருங்கள்.
நிறைவாழ்வடைவீர் வாருங்கள்;
நிரம்பும் மகிழ்வும் பாருங்கள்!
-ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
அம்மா, எங்கள் அம்மா!
பேறுபெற்ற பெற்றோர் கண்டார்.
பெயருற்ற கணவனும் கொண்டார்.
ஊறு செய்யா வாழ்க்கை கண்டார்;
ஊர்ப்பணியில் மகிழவும் கொண்டார்.
ஆறு பிள்ளைகள் பெற்றுத் தந்தார்;
அறிவூட்டியே வளர்த்தும் வந்தார்.
கூறு போடாப் பற்றைத் தந்தார்;
கிறித்தவராகவும் நடத்தி வந்தார்.
மாறுமுலகில் நேர்வழி என்றார்;
மறையா அன்பும் தந்து சென்றார்.
நூறு பேறுகள் பெறுவீர் என்றார்;
நோக்கும்போதே, இறையுள் சென்றார்!
(இன்று எங்கள் அம்மா,
கிளாறிபெல் செல்லையாவின்,
நினைவு நாள்)
செய்யுட் செய்தி!
இறை மைந்தன்!செய்தி:யோவான் 11:27.
செய்யுள்:
பல்லுயிர் படைத்துப் பரிவுடன் காக்கும்,
பரத்தின் அரசே இறைவன்.
நல்லருள் வாக்கின் வலுவால் மீட்கும்,
நன்மையின் உருவே இறைவன்.
இல்லையென்பாரும் இரக்கம் சேர்க்கும்,
இனிய தந்தையே இறைவன்.
எல்லா இனத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும்,
இயேசு மைந்தனே இறைவன்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
உயிர்ப்பு!
வாக்கு: யோவான் 11:23-26.
வாழ்வு:
இறப்பின் பின்னர் எது நடக்கும்?
எம்மறிவிற்குத் தெரியலையே!
பிறப்பின் ஏதும் புதிராயிருக்கும்;
பேசும் உயிர்ப்பும் புரியலையே!
திறப்பின் வாசல் எதுவாயிருக்கும்?
தெய்வம் தவிர பேறிலையே.
சிறப்பின் வாழ்வு நமதாயிருக்கும்;
சேர்க்க, பற்றன்றி வேறிலையே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
பாழிடம் பார்க்குமுன்!
வாக்கு; யோவான் 11: 21-22.
வாழ்வு:
வாழ்வின் பொருளே இயேசு;
வழங்குபவரும் இயேசு.
வீழ்வோர் வேண்டுவார் இயேசு.
விடுதலையாக்குவார் இயேசு.
தாழ்வில் நினைப்போம் இயேசு.
தகுதியாக்குவார் இயேசு.
பாழிடம் பார்க்குமுன், இயேசு
பார்க்க, பார்ப்போம் இயேசு!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.