அம்மா!

அம்மா, எங்கள் அம்மா!


பேறுபெற்ற பெற்றோர் கண்டார். 

பெயருற்ற  கணவனும் கொண்டார். 

ஊறு செய்யா வாழ்க்கை  கண்டார்;

ஊர்ப்பணியில்  மகிழவும்  கொண்டார்.

ஆறு பிள்ளைகள் பெற்றுத் தந்தார்;

அறிவூட்டியே   வளர்த்தும்  வந்தார்.

கூறு போடாப்  பற்றைத்  தந்தார்; 

கிறித்தவராகவும்  நடத்தி வந்தார். 

மாறுமுலகில் நேர்வழி என்றார்;

மறையா அன்பும் தந்து சென்றார். 

நூறு பேறுகள் பெறுவீர் என்றார்;

நோக்கும்போதே, இறையுள் சென்றார்!


(இன்று எங்கள் அம்மா,

கிளாறிபெல் செல்லையாவின், 

நினைவு நாள்)