கால் பிடித்தல்!

கால் பிடித்தல்!

செய்யுட் செய்தி!

செய்தி:யோவான் 11: 31-32.

31. அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள்.32. இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.

செய்யுள்:

மார்த்தாள் சொன்ன சொல் எடுத்து,

மரியாள் கூறி நில்லாது,

பார்ப்பார் என்ற கவலை விடுத்து,

பற்றில் கால் பிடிக்கிறார்.

ஆர்ப்பார் தந்த வாக்கினடுத்து,

அறிந்து மட்டும் செல்லாது,

தீர்ப்பார் குறைகள் எனப் படுத்து,

தெய்வக் கால் பிடிக்க, பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.