இனி காணோம்!

நற்செய்தி: யோவான் 11:33-35. 

இனி காணோம் என்கிற எண்ணம்,

ஈரக்குலையை இறுக்குகையில்,

மனிதர் விலங்கு பறவைகளும், 

மடிவார்முன் கலங்கிடுமே.

பிணி, மூப்பு, சாவின் முன்னம்,

புது வாழ்வு தெரியுமெனில்,

கனி உண்பார் களிப்பதுபோல்,

கண்ணீரும் துலங்கிடுமே!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.