ஆண்டுகள் இருபத்து நான்கு கடந்தும்,

ஆண்டவர் சொன்னது வரவில்லை. 

வேண்டிக் கேட்ட பிள்ளைப் பேறும்,

விரும்பும் ஆபிராம் பெறவில்லை. 

தாண்டிய நாடுகள் பின்பு கிடந்தும், 

தருகின்ற இறையும் தரவில்லை.

ஏன்டா இப்படி, என்றே  சொன்னோம்!

இப் பொறுமையிழத்தல் அறமில்லை!

(தொடக்கநூல் 17)