இயேசுவே அரசன்!

இயேசு அரசன்!

இறை மொழி: யோவான் 19: 19-20.

19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

இறை வழி:

எவ்வளவு முயன்று கெடுத்தாலும்

உண்மை ஒருநாள் வெளிப்படும்.

இவ்வளவு நிந்தை கொடுத்தாலும்,

இயேசுவே அரசன், எழுதப்படும்.

அவ்வளவு அறிவைப் பெற்றிருந்தும்,

அது புரியாமல் போனதே!

செவ்வளவு நேர்மை கற்றிடுவோம்;

செய்யும் இறையால் ஆனதே!

ஆமென்.

May be an image of text that says 'Meaning of the Inscription I.N.R.I. -IEVS N- NAZARENVS R- REX IVDAEORVM It is Latin which literally means: "Jesus of Nazareth, King of the Jews." Catholic Fortress'

அறைந்தார்கள் !

அறைந்தார்கள்!

இறை மொழி: யோவான் 19:18.

18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

இறை வழி:

குற்றமே செய்யா மனிதரைக் கொன்ற,

கொடூர செய்திகள் பல கேட்டு,

மற்றவர் தானே மடிகிறார் என்ற,

மமதை கொண்டு செல்கிறோம்.

சற்றுநேரம் சிலுவை முன் நின்று,

சாகும் கிறித்துவை நாம் தொட்டு,

உற்று நோக்கின் உணர்வோம் இன்று;

உயிர் மீட்சி கொள்கிறோம்!

ஆமென்.

May be an image of 1 person

இயேசுவும் நானும்!

இயேசுவும் நானும்!

இறை மொழி: யோவான் 19:17.

17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

இறை வழி:

ஈராயிரம் அடிகள் அன்று,

இயேசு சுமந்த சிலுவை.

தேறாதவர் மீள்வர் என்று

தெரிவிக்கும் பொறுமை.

ஆறாத சினத்தில் இன்று,

அதிர வைக்கும் செய்கை

பேராசான் முன்பு நின்று,

பேசும் என் வெறுமை!

ஆமென்.

No photo description available.

கும்பலின் நேர்மை!

கும்பலின் நேர்மை!

இறை மொழி: யோவான் 19:14-16

14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

இறை வழி:

ஆட்டமும் அகந்தையும் அள்ளியே விட்டு,

ஆள்பவர் நடப்பது கடுமையாம்.

கூட்டமும், கூச்சலும் கூறுதல் கேட்டு,

கொடுக்கும் தீர்ப்போ கொடுமையாம்.

வேட்டைக்காரரை நடுவாராய் வைத்து,

வேண்டி நாம் கிடப்பது மடமையாம்.

ஓட்டைப் பைகளை உடனடி தைத்து,

உண்மை சேர்ப்பதே கடமையாம்!

ஆமென்.

May be an image of one or more people

செயல்படாத நல்லெண்ணம்!

விருப்பமுண்டு, ஆனால்!

இறை மொழி: யோவான் 19:12-13.

12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

இறை வழி:

அன்றைய பிலாத்து ஆளுநர் போன்று,

அவதிப்படும் பல மனமுண்டு

கொன்றிடத் துடிக்கும் கூட்டம் சென்று,

கொடுக்க மறுக்கும் கனவுண்டு.

சிந்தையில் மட்டும் நினைப்பது அன்று;

செய்யாதிருந்தால் கடனுண்டு.

நன்மை எண்ணி நடத்திடு நன்று;

நல்லிறை, உன் உடனுண்டு!

ஆமென்.

May be an image of text that says 'THOSE WHO DO GOOD DEEDS WILL RISE TO A RESURRECTION OF... Life te John 5:29 Knowing-Jesus.com'

உரிமை!

ஆட்சியுரிமை!

இறை மொழி: யோவான் 19:10-11.

10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

இறை வழி:

ஆளும் உரிமை ஆண்டவர் தருவது.

அறிந்து ஆள்பவர், யார் இங்கே?

வாழும் உரிமை அனைவர்க்குரியது.

வழி மறுப்பதால், போர் இங்கே.

தாழும் நிலைக்குத் தள்ளிக் கெட்டது

தன்னலமாகும், கேள் இங்கே.

நீளும் துன்பம் முடிக்கப்பட்டது,

நேர்மையிலாகும்; வாழ் இங்கே!

ஆமென்.

No photo description available.

கொலை வெறி!

கொல்லத் துடிக்கும் வெறி!

இறை மொழி: யோவான் 19:6-9.

6. பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.

7. யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.

8. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

9. மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

இறை வழி:

கொல்லத் துடிக்கும் வெறியுண்டு;

கொலைக்கோ ஏது எதுவுமில்லை.

சொல்லும் வாயில் பொய்யுண்டு;

சொற்கேட்பவரோ பொதுவில்லை.

நல்லறிவென்பதில் அன்புண்டு.

நம்மில் பலரோ கற்கவில்லை.

மெல்லுரையாயினும் நெறியுண்டு.

மேலோர் வழியது, தோற்பதில்லை!

ஆமென்.

May be an image of text that says 'JESUS: SON OF GOD? Can Jesus be both God and man?'

மனிதன்!

மனிதன்!

இறை மொழி: யோவான் 19:5.

5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

இறை வழி:

அறிவுக்கப்பால் ஆளும் தெய்வம்

அன்பு வடிவில் புவி வந்தார்.

இறையருள் வாக்கை நிறைவாக்கும்,

ஈடிலா பணிக்கு உரு தந்தார்.

மரியாள் மகனாய் மானிடர் கண்டும்,

மக்களை மீட்க இறை வந்தார்.

புரியாதவர்கள் கண்கள் திறக்கும்;

புனித இயேசு தனைத் தந்தார்!

ஆமென்.

May be an image of text that says 'Jesus came out, wearing the crown of thorns and the purple robe, and Pilate said to them Behold, the Man! John 19:5 Knowing-Jesus.com wing-Jesus.com'