தாய்க்கொரு காப்பகம்!
இறை மொழி: யோவான்:19:25-27.
25. இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
26. அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
27. பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.
இறை வழி:
கதியற்று நிற்கும் தாயைக் கண்டு,
கை விட்டு ஓடும் பிள்ளைகளே,
விதியென்று இயேசு உரைத்தது கேட்டு,
விரையும் யோவான் பாருங்களே.
மதியற்று மனிதர் தள்ளுதல் கண்டு,
மறு வாழ்வளிக்கும் உள்ளங்களே,
துதி புகழ் அல்ல, தூக்கும் சிலுவை;
துன்பில் இன்பம் சேருங்களே!
ஆமென்.
![May be a black-and-white image of one or more people](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/401179062_7073778185986256_8090793921185812065_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=XVIiXrrnYksAX9oFPPM&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfD9wA2Jsi4xLvu4b5OkO4fQSh4uhbPTObtn5g-2nO9aqg&oe=655CC14B)