விருப்பமுண்டு, ஆனால்!
இறை மொழி: யோவான் 19:12-13.
12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
இறை வழி:
அன்றைய பிலாத்து ஆளுநர் போன்று,
அவதிப்படும் பல மனமுண்டு
கொன்றிடத் துடிக்கும் கூட்டம் சென்று,
கொடுக்க மறுக்கும் கனவுண்டு.
சிந்தையில் மட்டும் நினைப்பது அன்று;
செய்யாதிருந்தால் கடனுண்டு.
நன்மை எண்ணி நடத்திடு நன்று;
நல்லிறை, உன் உடனுண்டு!
ஆமென்.
![May be an image of text that says 'THOSE WHO DO GOOD DEEDS WILL RISE TO A RESURRECTION OF... Life te John 5:29 Knowing-Jesus.com'](https://scontent.fmaa3-3.fna.fbcdn.net/v/t39.30808-6/399258992_7024602437570498_8414314239876770564_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=1aopywFULpAAX_klHlW&_nc_ht=scontent.fmaa3-3.fna&oh=00_AfA-QSc8D2ei1D4MXXnsEb1GZB6Xu2AoA_uHWF9mDic6RA&oe=654A6014)