கும்பலின் நேர்மை!

கும்பலின் நேர்மை!

இறை மொழி: யோவான் 19:14-16

14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

15. அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

இறை வழி:

ஆட்டமும் அகந்தையும் அள்ளியே விட்டு,

ஆள்பவர் நடப்பது கடுமையாம்.

கூட்டமும், கூச்சலும் கூறுதல் கேட்டு,

கொடுக்கும் தீர்ப்போ கொடுமையாம்.

வேட்டைக்காரரை நடுவாராய் வைத்து,

வேண்டி நாம் கிடப்பது மடமையாம்.

ஓட்டைப் பைகளை உடனடி தைத்து,

உண்மை சேர்ப்பதே கடமையாம்!

ஆமென்.

May be an image of one or more people