ஆளுநரின் வீம்பு!
இறை மொழி: யோவான் 9:21-22.
21. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
22. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
இறை வழி:
விருப்பமில்லாமல் விட்டுக் கொடுப்பார்
வீம்பின் சிகரம் தொட்டும் கெடுப்பார்.
நெருப்புப் பிளம்பாய்க் கட்டிப் பிடிப்பார்
நீராய் மாறி வெட்டியும் வடிப்பார்.
பொறுப்பில்லா இருமனத்தார் ஆள்வார்.
போன பின்னர், காட்டிலே தாழ்வார்.
கருப்புச் சின்னமாய்க் கேட்டில் வாழ்வார்,
கால் கை கட்டப் பட்டே வீழ்வார்!
ஆமென்.
![May be an image of 2 people](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/400858782_7057534730943935_2172455469641985458_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=MAMQEhisutEAX8l5v36&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfA_-OyD_Ii9-hcCLXkzR7uauIuxVScpIEYRs6mqPt8zlw&oe=6556B14C)
A