அறைந்தார்கள்!
இறை மொழி: யோவான் 19:18.
18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
குற்றமே செய்யா மனிதரைக் கொன்ற,
கொடூர செய்திகள் பல கேட்டு,
மற்றவர் தானே மடிகிறார் என்ற,
மமதை கொண்டு செல்கிறோம்.
சற்றுநேரம் சிலுவை முன் நின்று,
சாகும் கிறித்துவை நாம் தொட்டு,
உற்று நோக்கின் உணர்வோம் இன்று;
உயிர் மீட்சி கொள்கிறோம்!
ஆமென்.
![May be an image of 1 person](https://scontent.fmaa3-2.fna.fbcdn.net/v/t39.30808-6/400614977_7042244649139610_7530768597880399863_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=O6Sbu4tYrJQAX8o9zOp&_nc_ht=scontent.fmaa3-2.fna&oh=00_AfCdJMAnE-j4UHUUIVV_v9B5x9ZYKkG93hnzy1HOi-nXxw&oe=6551822D)