இறை வழி:
தொடக்கத்தின் முன்னே எவ்விடம் இருந்தோம்?
தொடர்ந்து சென்றால் எவ்விடம் முடிப்போம்?
அடக்கத்தின் பின்னே எவ்விடம் அடைவோம்?
அதற்குத் தேவைகள் எவ்விடம் பிடிப்போம்?
கிடைக்கிற அறிவால் அவ்விடம் அறியோம்.
கிறித்துவை விட்டால் அவ்விடம் துடிப்போம்.
விடைக்குப் பணிவோம், அவ்விடம் காண்போம்;
விண்ணே வாழ்வு, அவ்விடம் நடப்போம்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.