வேண்டுகிறார்!

வேண்டுகிறார்!

இறை மொழி : யோவான் 16:26. 

வேண்டும் இறைமகன் காட்சி கண்டு,

வேண்டிக் கேட்போர் எத்தனை பேர்?

தூண்டும் அவரது பண்பு கொண்டு,
தூயர் ஆவோர் எத்தனை பேர்?

மாண்டும் மடிந்தும் விழுவோர் கண்டு, 
மனதை மீட்போர் எத்தனை பேர்?

தோண்டும் குழியிலும் வேண்டிக் கொண்டு,
தூக்கப் போவோர் எத்தனை பேர்? 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.