நோபல் பரிசு!

ஆயும் பண்பை அடகும் வைத்தோம். அறிவுள்ளோரை அடக்கியும் வைத்தோம். பேயும் எண்ணாப் பிரிவினை செய்தோம்; பிறந்த நாட்டின் சிறப்புமிழந்தோம். நீச்சலில் சிறந்த மீனவர் உண்டு. நீர் நிலைப் பணியில் இடமோ இல்லை. கடல் வாழ் இனங்களைக் கற்றலும் உண்டு. கடலாடிகளுக்கோ இடமே இல்லை. நீந்தத் தெரியாதவர்கள், நீந்தத் தெரியாதவர்களை, நீச்சல் வீரர்களாய், நியமிக்கிற நிர்வாகத்தில், நோபல் பரிசு என்று, நினைத்துப் பார்க்கலாமா?

யோவான் 9:18-21.

எப்படி நிகழ்ந்தது?

நல்வழி: 


எப்படி இந்த மாற்றம் வந்தது?

யாரால் இவரது கண் திறந்தது?

அப்படி வினவி தெளிவுறுவது,

ஆன்றோருக்கு, அறிவு, அழகு. 

இப்படி அறிய விரும்பாதிருப்பது,

ஏசிப்பேசி, இகழ்ந்துரைப்பது, 

செப்படி வித்தைக்காரரின் தவறு;

சேதம் வருது, விட்டு விலகு!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.