யோவான் 9:34.

புறந்தள்ளுகிறார்!

நல்வழி:


நல்லது சொன்னால் நம்ப மறுப்பார்,

நல்வாக்கினரை விரட்டுகிறார். 

சொல்வது யாரென ஆளைப் பார்ப்பார்,

சொல்கிற ஏழையை மிரட்டுகிறார்.

வெல்வது இதனால் மடமை என்பார்,

விரும்பார் விட்டு அகலுகிறார்.

உள்ளதை உள்ள படியாய்க் காண்பார்,

உண்மை இறையுள் புகலுகிறார். 


ஆமென். 


கெர்சோம் செல்லையா.