யோவான் 9:35-38.

நல்வழி:


மரியின் மகனாய் வந்தவரை,

மனிதன் என்பதும் சரியே.

அறிவின் வாக்குகள் தந்தவரை,

ஆசான் என்பதும் சரியே. 

தெரியா வழியில் அழைப்பவரை,

தெய்வ மகன் எனில், சரியா? 

எரிகடல் மீட்டெனை ஆள்வதனால்,

இப்படிக் கூறல், மிகச்சரியே! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.