பழிச்சொல்!

இறை வாக்கு: யோவான் 9:24-25.

இறை வழி:


வெறுப்பு கொண்டோர் பேச்சு கேட்டால்,

வீண்பழிச் சொற்கள் நிறைந்திருக்கும்.

பொறுப்பு அற்றோர் செயற்பாட்டால்,

பொறுமை கூட குறைந்திருக்கும். 

நெருப்பு என்கிற பழிச்சொல் எரித்தால்,

நீங்களும் நானும் என்னாவோம்?

விருப்பு இறையுள் நாம் சிரித்தால்,  


விடுதலையாகிப் பொன்னாவோம்!  


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.