yovaan 9:39-41.

காணாக் கண்கள்!

நற்செய்தி: யோவான் 9:39-41.

நல்வழி:


காணாக் கண்கள் கொண்டவனாய்,

கனவில் பறந்தேன், போதுமய்யா. 

வீணாம் நினைவின் விளைவுகளால்,


விண்ணை மறந்தேன், தீது அய்யா.

கோணார் நேர்மையில்  இனி நடப்பேன்;


கிறித்து பிறப்பால் மாற்றுமையா.

வாணாள் முழுவதும் ஆவியரின்,

வரங்கள் சிறக்க ஊற்றுமையா! 


ஆமென். 


கெர்சோம் செல்லையா.