என் மொழி!

என் மொழிக் கொள்கை!

பன் மொழி பேசும் என் பழ நாட்டில்,

தன் மொழி உயர்ந்தது என்றுரைப்பார்

இன் மொழி அறியாதிருப்பதானால்,

நன் மொழி கேட்டு, பிழைக்கப் பார்.


எம்மொழி கேட்கையில், அம்மொழி வெறுப்பில்,

தம் மொழி வளர்க்க மறப்பதானால்,

செம்மொழி தமிழில் இம்மொழி சொல்வேன்;

உம் மொழி தழைக்க, உழைக்கப் பார்!


-கெர்சோம் செல்லையா.

அச்சம்!

இறைவாக்கு: யோவான் 9:22-23.

இறை வாழ்வு:


பற்று இல்லா நெஞ்சம் எங்கும், 

பரவிக் கிடக்கும் அச்சம்.

சற்று நேரம் ஆய்ந்திட நீங்கும்.

சரி செய்யாவிடில் எச்சம்.

உற்று நோக்கி, தெய்வம் பாரும்;

உள்ளில் வருமே துணிவும்.

பெற்று வாழ்வார் கூட்டில் சேரும்;

பேரச்சமும் பணியும்! 


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.