நாலடி நற்செய்தி!
உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!
-செல்லையா.
The Truth Will Make You Free
நாலடி நற்செய்தி!
உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;
உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.
கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,
கரையும் என்றே, தப்பினை மாயும்!
-செல்லையா.
எது மீட்கும்?
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;
உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.
எங்கள் மீட்பு இதனைச் சொல்லும்;
இறைவழி தானே என்றும் வெல்லும்!
-செல்லையா.
என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.
நல்வழி:
என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,
எங்கும் நடத்தும், என் இறையே,
தன்னம் தனியே தள்ளவும் தடுத்து,
தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே.
இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;
இறைவழி காட்டிடும் திருமறையே.
சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,
சீராக்கட்டும் இவர் குறைவே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
தாழ்வு தருகிற உயர்வு!
நற்செய்தி: யோவான் 8:28.
நல்வாழ்வு:
தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,
தவறாதிறை முன் வருவீரே.
வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,
வளமாம் தாழ்மை பெறுவீரே.
ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;
இறையறிவாகும், தெரிவீரே.
ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,
அன்பால் நன்மை புரிவீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
இயேசு யார்?
நற்செய்தி: யோவான் 8:25-27
நல்வழி:
என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,
என்னை ஆளும் ஏசுவே,
முன்னில் வந்து, கேளாதிருந்து,
முனகுவாரிலும் பேசுமே.
தன்னைக் காணும் தன்மை ஈந்து,
தவற்றினின்று மீளுமே.
பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,
பேரறிவாலே ஆளுமே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.