நாலடி நற்செய்தி!

நாலடி நற்செய்தி!


உண்மை ஒன்றே விடுதலை ஆக்கும்;

உணர்ந்து இன்றே கெடுதலை நீக்கும்.

கண் மை போன்ற ஒப்பனைச் சாயம்,

கரையும் என்றே, தப்பினை மாயும்! 


-செல்லையா.

நாலடி நற்செய்தி!

எது மீட்கும்?

 
உங்கள் பற்று உங்களைக் காக்கும்;

உண்மை நம்பி, உளம் புதிதாக்கும்.  

எங்கள் மீட்பு  இதனைச்  சொல்லும்;


இறைவழி தானே என்றும் வெல்லும்!

-செல்லையா.

என்னுடன் இருப்பவர்!

என்னுடன் இருக்கும் நன்னிறை!
நற்செய்தி: யோவான் 8:29.

நல்வழி:

என்னைப் படைத்து, யாவையும் கொடுத்து,

எங்கும் நடத்தும், என் இறையே,

தன்னம் தனியே தள்ளவும் தடுத்து, 

தாங்கிச் சுமப்பதும் உம் நிறைவே. 

இன்னிலத்தோரும் இவ்வறிவடைவார்;

இறைவழி காட்டிடும் திருமறையே. 

சென்னிறக் குருதி தந்திடும் உறுதி,

சீராக்கட்டும் இவர் குறைவே! 

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.  

தாழ்வு தருகிற உயர்வு!

தாழ்வு தருகிற உயர்வு!

நற்செய்தி: யோவான் 8:28.

நல்வாழ்வு:


தாழ்வில் உயர்வு, பெற்றுச் சொல்ல,

தவறாதிறை முன் வருவீரே. 

வாழ்வின் மேன்மை குருசில் கண்டு,

வளமாம் தாழ்மை பெறுவீரே.

ஏழ்மை என்றும் பொருளில் அல்ல;

இறையறிவாகும், தெரிவீரே. 

ஆளும் இறையின் தாழ்மை கொண்டு,

அன்பால் நன்மை புரிவீரே!

ஆமென்.


-கெர்சோம் செல்லையா. 

இயேசு யார்?

இயேசு யார்?


நற்செய்தி: யோவான் 8:25-27

நல்வழி:


என்னில் எழுந்த ஐயம் தீர்த்து,

என்னை ஆளும் ஏசுவே,

முன்னில் வந்து, கேளாதிருந்து, 

முனகுவாரிலும் பேசுமே. 

தன்னைக் காணும் தன்மை ஈந்து,

தவற்றினின்று மீளுமே. 

பின்னிக் கொண்ட, பேதைமை ஓட,

பேரறிவாலே ஆளுமே!


ஆமென். 

-கெர்சோம் செல்லையா.