மெய்மை தரும் விடுதலை!

மெய்மை தரும் விடுதலை!


நற்செய்தி: யோவான் 8:30-32.  
30. இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம்வைத்தார்கள்.
31. இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

நல்வழி:


மெய்மை தருகிற விடுதலையொன்றே,

மேன்மையான விடுதலையாம். 

செய்கை, வாக்கில் தூய்மை என்றே,

செயல்படாதோர் அடிமைகளாம்.

எய்தல் வைத்து இலக்கை இன்றே,

எடுத்துக் காட்டி முடிக்கும் நாம்,

பொய்மை விட்டு விடுதல் நன்றே;

புரியார் வாழ்வும் வெடிக்குமாம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.